Saturday, September 26, 2015

மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-4


மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-4

மூன்றாம் பாகத்துடன் பூர்த்தி என எனது மலைநாட்டு விஜயத்தை பற்றி எழுதிய பிறகும்...

ஒரு சிறு பகுதியை இணைக்கலாம் என்று தோன்றியதால் ...பகுதி -4

திருவனந்தபுரம் பத்மநாபன் கோவில் ஐந்து நிலவறையில் நான்கு அறைகள் திறக்கப்பட்டு, அங்கு இருந்த பல தங்க மற்றும் வைர ஆபரணங்கள் பொதுவாக எடை மட்டும் போடப்பட்டன என்று அறிகிறோம் (விலையெல்லாம் போட்டுருக்க முடியாது) 


இதில் ஐந்தாவது நிலவறையை பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன ...அது பல மந்திர சக்திகளால் மூடப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது...


இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்தவுடன் இந்த புதையல்கள் சேமித்த 18ஆம் நூற்றான்டின் மக்களை பற்றியும் பல விசயங்களை படித்தேன்...



அதில் மிக சுவாரசியமான ஒன்று ராஜா தர்மராஜாவின் சகோதர்ர் ஒருவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லவராக திகழ்ந்ததும்... அன்றைய காலத்தில் புகழ் வாழ்ந்த பிதாம்பர ஐயர் உடன் தொடர்பில் இருந்தார் என்பதும் கிடைத்த விசயம்....









இந்த பிதாம்பர ஐயர் "ஜாலத்திரட்டு"  என்கிற ஒரு மந்திரசாஸ்திர புத்தகத்தை எழுதியிருக்கிறார்.   எனது அனுமானம்.. ஒரு அரசனின் சகோதரரே இந்த கலையில் சிறந்து விளங்கியிருந்திருக்கும் போது... இந்த பொக்கிஷங்கள் நிச்சியமாக மந்திர சக்திகள் கொண்டு மூடப்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம்....










சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு பத்மநாப கோவிலில் இருந்த தாந்திரிகள்  திப்பு படைஎடுப்பின் பொது அவனை விரட்டி கீழே விழ வைத்து விரட்டிய விஷயத்தை அது நடபதர்க்கு முன்பே சொல்லிய விசயம் ... அரசன் பத்மநாபர் முன்பு வேண்டியது .. போன்ற பல விசயங்கள் 





ஜாலம் என்பது "கண்கட்டு வித்தை" என்று சொல்லப்படுகின்ற  இல்லாததை  இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் காட்டுவது ..

நமது பாரதத்தில் இந்த வித்தையை மக்களை மகிழ்விக்கவும் ..இதை அறிந்தவனின் மன எண்ணம் போல நல்லவனாக இருப்பின் நன்மையையும் தீயவனாக இருப்பின் தீயவையும் செய்வான் ..


இந்த ஜால வித்தை செய்ய இரண்டு விதமான விசயங்கள் தேவை ..பல விதமான மூலிகைகள் மற்றும் மந்திர அனுஷ்டானங்கள் ...மற்றும் இறந்த மனித மற்றும் மிருகத்தின் உடற்பாகங்கள் !!!

மனிதனின் மூளையில் உள்ள பலவிசயங்களை ஏமாற்றி .. நம்ப செய்யும் விசயமாக இது இருப்பதால் ..நம்மை ஒரு நபரிடம் அதிகமாக அறிவிற்கு மீறிய நம்பிக்கை வைக்க செய்யும் வித்தை (உலகமே கேவலமாக பேசும் சாமியாரிடம் பெண்கள் கூட்டமாக வணங்கும் வித்தை !!)


நீங்கள் செய்யும் வியாபரத்தலத்தில் வந்து வியாபாரம் செய்பவர் சாதகமாக நடக்கும்படி செய்தல் ... போன்றவை இவற்றினால் செய்யலாம் !!

நாம் வணங்கும் பல தெய்வ ஆலயங்களிலும் பல வித மூலிகை கொண்டே நமது மன ஆக்ரஷ்ண மற்றும் மன அமைதி போன்ற பல நல்ல விசயங்களை செய்விக்கிறார்கள் ..

இந்த மூலிகைகளை தாண்டி மிக வேகமாகவும் .. ஆக்ரோஷமாகவும் வேலை செய்ய... மனித மற்றும் மிருகங்களின் உடல் பாகங்களை பயன்படுத்தும் வித்தையும்  செய்வதுண்டு ..

சிறிது காலத்திற்கு முன் பல பத்திரிக்கைகளில் வந்த சென்னையை சேர்ந்த ஒரு கேரளா வைத்தியர் . பல அரியவகை மிருகங்களை வேட்டையாடினார் அதனால் கைது என்று செய்தி படித்து இருப்பீர்கள் .(அவரை அந்த கேஸ் நடந்து முடிந்த பிறகு .. பல கோடிகள் குடுத்து வெளியில் வந்து பிறகு நேரில் சந்தித்து சிறிது நேரம் பேசினேன் ஒரு நண்பருடன் .. இதை பற்றி இல்லை .. ) . அதுவும் ஒரு வகை ஜால வித்தையே .. மிருகங்களின் உறுப்புகளை பயன் படுத்தி (சிறிய அளவில் ) பல வித தீராத வியாதிகளை சில நாளில் குணப்படுத்த முடியும் !!

இந்த வைத்திய முறைக்கு ராஜவைத்தியம் என்று பெயர் .. சில நாளில் எந்த வியாதியையும் குணப்படுத்த முடியும் !! (அப்போ இதை ஏன் செய்யவில்லை அப்போலோ ஆஸ்பிடல் எல்லாம் எதற்கு என்று கேட்பது புரிகிறது ..இதை செய்பவன் காசு வாங்க கூடாது இல்லை என்றால் அந்த கருமம் அவனை பீடிக்கும் .. நான் சந்தித்த அந்த வைத்தியர் .. வாராவாரம் சில கோடிகள் குவித்தார் .. வாங்கிய பல கார்களை நிறுத்த இடமில்லாமல் ஒரு சினிமா தியட்டரை வாங்கினார் !! கடைசியில் கேஸ் இல் மாட்டி இப்போது ஒரு டூ வீலரில் போகிறார் !!

இதே ஒரு வகை மந்திர மை செய்யும் விதம் .. பயன்படும் பொருள் மனித மண்டை ஓடு ... !! இதில் பயன் படுத்த சொல்லி இருக்கும் பல பொருள்கள் பற்றி விவரமாக விளக்கினால் .. அது செய்யும் கேடுகள் பற்றி அறிவோம் !!, இன்று காணும் நவீன உலகின் பல அபத்தங்கள் விலக்கப்படும் !!! அதில் ஒன்று நாதநீர் .. (menstrual blood) ..இவைகள் பலவித மனித மனதில் எதிர்ப்புகளை உண்டாக்கும் !!





 காலத்தின் நன்மையால் விஞ்ஞான வளர்ச்சியால் இவைகள் அழிந்து போயின !! இதில் சொல்லப்பட்ட பல விசயங்களை கொண்டு நாம் அன்றாடம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி எழுத நினைக்கிறேன் ..

மந்திரங்கள் .. மற்றும் ஜாலவித்தையில் சொல்லப்பட்ட பல கெடுதலான தவிர்க்க வேண்டிய விசயங்கள் பற்றி ..


எவ்வளவு பேர் கேட்கா விரும்புகிறீர்கள் ???





Thursday, September 24, 2015

மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-3

                       Karthika Thirunal Rama Varma (1758 – 1798)


மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-3




      பத்மானாபர் கோவில்  பொக்கிஷ நிலவறைகள் கார்த்திகை திருநாள் ராம வர்மா (தர்மராஜா என்று அழைக்கப்பட்ட ) இவர் காலத்தில் அவரது மந்திரி ராஜா கேசவதாசினால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை பார்த்தோம்!!

     தர்மராஜா தனக்கு பின்னால் அரசனாக  வரப்போகும் பால ராமவர்மாவை .. இளவரசுப்பட்டத்தில் இருந்து விளக்கி வைத்திருந்தார் .. காரணம் .. அவரது ஊதாரித்தனம் ..பெண் பித்தும் .ஆயினும் . காலத்தின் கொடுமை .. பல சதிகளுக்கு பின் பால ராமவர்மாவே அரசர் ஆனார் ..


     இந்த சதிக்கு பின் புலமாக இருந்து செயல் பட்டவன் ஜெயந்தன் நம்பூதிரி.. இவன் கொச்சின் சமஸ்தானத்தை சேர்ந்தவன் ... இவனது சதி வேலைகளை எதிர்த்தாலும் ..இவர்களால் பொக்கிஷ அறை ரகசியங்களை தெரிந்து கொள்ள முடியாததாலும் .. “விலக்கு நீட்டு “ என்கிற வேலை நீக்கு ஆணையை அளித்து  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் விஷம் வைத்து "ராஜா கேசவதாஸ்"  கொல்லப்பட்டார் !! இதை பற்றி அன்றைய east India company கடிதங்களில் கூறப்பட்டதாவது ...




ஒருபுறம் .. திவான்கள் ... மறுபுறம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி என்று பல வழிகளில் 19 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சுரண்டப்பட்டு திவால் ஆக்கப்பட்டது ...

பல சந்தர்ப்பங்களில் நிதி இல்லாமல் திருவிதாங்கூர் திவால்நிலைக்குச் சென்றிருக்கிறது.  பிரிட்டிஷ் நிதிவசூல் கெடுபிடிகளை, மிரட்டல்களை, கிட்டத்தட்ட வழிப்பறிக்கொள்ளைக்குச் சமானமான பிடுங்கல்களை நாம் ஆவணங்களில் காணலாம். மன்னர்கள் கெஞ்சுகிறார்கள். மேலும் மேலும் கெடுநீட்டிக்கிறார்கள். முக்கால்வாசி பணம் கொடுத்து ஆசுவாசம் கொள்கிறார்கள். மிகையான வரிவிதிப்பால் அஞ்சுதெங்கு, ஆலப்புழா  ஆகிய துறைமுகங்கள் படிப்படியாக அழிவதை மன்னர்கள் முறையிட்டு  மன்றாடிச் சொல்கிறார்கள். ஆனால் பிரிட்டிஷார் திருவிதாங்கூரை அடிமாட்டுக்கு அனுப்பும் முன் கடைசியாகக் கறக்கும் பசுவாக நினைத்தனர்.


மூலம் திருநாள் மகாராஜா 1897ல் பேச்சிப்பாறை அணையைக் கட்ட முயன்றபோது நிதி இல்லாமல் அரசுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான சிறிய குளங்களை தமிழகத்தைச் சேர்ந்த தனியார் விவசாயிகளுக்கு வயலாக விற்று நிதி திரட்டினார். அரசர் நிலக்கிழார்களுக்கு எழுதிய கடிதங்கள் இன்றுகிடைக்கின்றன


இதை பற்றி நீங்கள் நிறைய படிக்க ஆசை பட்டால் ... பார்க்க வேண்டியது ...

>>>>>திருவிதாங்கூர்<<<<<






அவர்களின் வரவு செலவு பற்றிய செய்திகள் பல உள்ளன .. அவர்கள் தினப்படி செலவிற்கே தடுமாறிய கதை புரியும்!!! இவ்வளவு அளவிற்கு ஒரு தங்கப்புதையல் இருப்பது தெரிந்து இருந்தால் நிச்சியமாக வெள்ளைக் கார கொள்ளையர்கள் மற்றும் பல சதிகாரர்கள்  விட்டு வைத்திருக்க மாட்டார்கள் ..

இந்த மிகப்பெரிய போகிஷத்தை 21 ஆம் நூற்றாண்டிற்கு காட்டிகுடுத்து விட்டு சென்ற அந்த மாபெரும் மந்திரி ...ராஜா கேசவதாஸ் என்கிற மகான்தான்.. (மந்திரி என்றாலே கொள்ளைக்காரன் என்கிற இன்றைய நூற்றாண்டில்)  .. தன உயிர் மாண்டாலும் வாய் திறவாமல் அவர் சென்றதால் .. இவை நமக்கு இன்று கிடைத்துள்ளன !!!

இப்படி பட்ட அந்த ராஜா கேசவதாஸ் பற்றிய ... சிறு தகவல் ...



இந்த நிலவறை வாசல்கள் .. பல மந்திர சக்திகளால் மூடப்பட்டு இருந்தன என்றும் சொல்லுகிறார்கள் .. தர்மராஜாவின் சகோதரர் ஒருவர் மக்கியரம் திருநாள் (மிருகசீருஷம் ) ஒரு மிக சிறந்த மந்திர வாதியாக திகழ்ந்தார் என்றும் இவர் அந்த காலத்தில் தமிழகத்தில் மிக புகழ் வாய்ந்த  பீதாம்பர ஐயர் என்கிற மந்திரவாதியுடன் தொடர்பில் இருந்தார் என்று சொல்லப்படுக்றது 
இவர் 1786 இறந்து விட்டார் (இந்த  பீதாம்பர ஐயர் எழுதிய “ஜாலத்திரட்டு” என்கிற சுடுகாட்டு மந்திர வாத புத்தகத்தை நான் (விஜி!!)  பயத்துடன் படித்து இருக்கிறேன் !!) 


நிறைவு ...








மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-2

       
                                          Uthradom Thirunal Marthanda Varma(1991-2013)


பத்மநாப கோவில் சுவர்ண குவியல் வெளியே தெரிய வந்து இன்று உலகமே அறியும் கோவிலாக அது அறியப்பட்டு விட்டது ..

இதில் முதல் கேள்வி .. இந்த அளவிற்கு உள்ளே சில லக்ஷம் கோடி ரூபாய் பெறுமானம் உள்ள தங்கம் உள்ளே இருக்கிறது என்று இந்த கோவிலின் .. பாதுகாவலர்களான திருவாங்கூர் அரசர்களுக்கு தெரியுமா ?? என்றால் .. பல சரித்திர விசயங்களை பார்க்கும் போது .. சந்தேகமாகதான் இருக்கிறது !!


ஆம் .. அவர்களுக்கே இது தெரியாவில்லை என்பதே உண்மை .. ஏன் என்று பார்ப்போம் .. அவர்களுக்கு பல அறைகள் இருக்கின்றன .. அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என்ற நினைக்கிறேன் .. காரணம் 

மறைந்த மன்னர் சித்திரைத் திருநாள் பாலராமவர்மா அவர்கள்,திருவனந்தபுரம் பத்மநாபசாமிகோயிலில் கருவறைக்கு முன்னால் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்ற முகமண்டபத்தைப் பொன்வேயவேண்டும் என்ற கனவைக்கொண்டிருந்தார். அதற்கான நிதியை அவரால் உருவாக்க முடியவில்லை. அவரது ஆசையை நிறைவேற்ற இப்போதைய மன்னர் முன்பு இருந்த உத்ராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா மகாராஜா முயன்றார்..(படத்தில் உள்ள வயதானவர்) . அப்போது அவருக்கு ஓர் ஆலோசனை சொல்லப்பட்டது. ஆலயத்தில் கருவறை அருகே நிரந்தரமாகப் பூட்டியே இருக்கும் ஆறு ரகசிய அறைகளில் சிலவற்றில் அனந்தபத்மனாபனுக்குச் சொந்தமான பொன் இருப்பதாகவும் அவற்றை எடுத்து உருக்கிப் பயன்படுத்தலாமென்று!!


மார்த்தாண்டவர்மா அதற்காக 2007ல் முயன்றார். அப்போது அது செய்தியாக
வெளியே தெரியவே அப்படி செய்ய மன்னருக்கு உரிமையில்லை என்று வழக்கறிஞர் டி.பி.சுரேந்திரன் தலைமையில் நீதிமன்றத்தை அணுகினார்கள். அனந்தபத்மநாபசாமிகோயிலின் பரம்பரை அறங்காவலர் மன்னர்தான். ஆனால் கோயில் அவருக்குச் சொந்தமானதல்ல. இந்திய அரசின் சொத்து அது. ஆகவே டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது


2011ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆலயத்தை அரசுடைமையாக்கவும், பொதுமக்கள், அரசு, நீதிமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்த ரகசிய அறைகளைத் திறந்து பார்க்கவும் ஆணையிட்டது. அவ்வாறு திறந்தபோதுதான் உலக வரலாற்றின் மிகப்பெரிய தங்க பொக்கிஷம்  ஒன்று கிடைத்திருக்கிறது– இன்னும் ஓர் அறை திறக்கவேண்டியிருக்கிறது. இப்போது பல லக்ஷம் கோடி என கணக்கு ஏறிக்கொண்டு இருக்கு அதன் மதிப்பு !! 


இந்த போற்குவியலகளை பற்றிய சரித்திர குறிப்புகளை பற்றி நாம் செல்லவேண்டியது  1789 .. திப்புசுல்தான் கேரளா நாட்டின் மீது தனது கொடுமையான படையெடுப்பின் துவக்கத்தில்தான் .. 

அப்போது திருவாங்கூர் நாட்டை ஆண்டுகொண்டு இருந்தவர் .. மிகப்புகழ் வாய்ந்த அரசர் ..நிஜ தர்மராஜா என்று பாமரகளால் அழைக்கப்பட்ட கார்த்திகைத்திருநாள் ராமவர்மா... இவரின் மதியுக மந்திரியான கேசவதாஸ் என்பவரின் திட்டமே இந்த ரகசிய அறைகளில் அரண்மனை செல்வங்களை பாதுகாக்க வைக்க வைத்த திட்டம் ..

சொல்ல மறந்து விட்டேனே .. இந்த கேசவதாஸ் தலைமயிலான படை தான் திப்புவை அடிச்சு விரட்டி பள்ளத்தில் தள்ளி .. காலை உடைத்து அனுப்பியது !! அன்றும் அந்த பத்மநாபன் (என் அரங்கனே அவன் .. என்றும் துலுக்கனை வெற்றி கொள்ள வைத்தாதில்லை !!) அந்த காயமே அவனை ஸ்ரீரங்க பட்டினத்தில் .. ரோட்டில் தப்பி ஓடும் பொது சுட்டு கொல்ல ஏதுவாக்கியது !!  

எனவே ... அந்த செல்வமும் நாடும் தப்பியது .. அரங்கனாகிய அந்த பத்பநாபன் .. நாட்டையும் அந்த பெரும் செல்வத்தையும் காப்பாற்றி 1790 ஆண்டில் இருந்து வைத்து கொண்டு உள்ளான் !!!

..திருவாங்கூர் என்பது ஒரு சிறிய சமஷ்தானமே .. அவர்கள் எங்கும் படை எடுத்து செல்லவில்லை .. இவர்களிடம் எப்படி இவ்வளவு செல்வம் வந்தது?? 

1740 டி-லென்னாய் என்கிற டச்சு காரன் இவர்களிடம் தோல்வி அடிக்கிற வரை (அவர்கள் குறிப்புகள் இருந்து ) திருவாங்கூரில் நில வரி கூட கிடையாது !!

எதற்க்காக சொல்லுகிறேன் என்றால் .. இவர்களின் இந்த அளவு செல்வம் வெள்ளைக்கார்களிடம் இவர்கள் நடத்திய (மிளகு, கிராம்பு, ஏலம் போன்ற) வாசனைத் திரவியம் வியாபாரத்தில் கிடைத்த தங்கம் மட்டுமே !! 

இதில் திப்புவின் கடுமையான இந்து கோவில்களை இடித்தல் போன்ற கொடூரங்களால் .. பல கோவில் சிலைகள் மற்றும் பல அரச மற்றும் பணக்கார பிரபுத்துவ குடும்பங்கள் தங்கள் செல்வங்களுடன் திருவாங்கூர்இல் தஞ்சம் அடைந்தன ...


அனைத்து செல்வங்களும் நாம் முன்பே பார்த்த கேசவதாஸ் திட்டத்தின் படி பத்மநாபனிடம் ஒப்படைக்கப்பட்டன !! 

நிற்க ... ஒரு சிறு எண்ணம் ..

சரி நமது தமிழகத்தை பார்த்தால் .. இந்திய நாட்டிலே வெளி தேசங்களில் சென்று படை கொண்டு  ஆண்டவன் என்றல் .. அது ராஜேந்திர சோழன்தான் .. அவனிடம் இருந்த தங்கம் மலை அளவு என்று எல்லாரும் சொல்லுகிறார்கள் !! அவைகள் எங்கே?? 

அது சரி .. நமது ஸ்ரீரங்கம் ?? 1321 முகமது பின் துக்ளக் (உலுக்கான் ) படை எடுப்பின் பொது சுமார் 90 டன் எடை கொண்ட தங்க புதையல்களை ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து எடுத்து சென்றான் என்று சொல்லுகிறார்கள் !!

பின்னர் ....1371 பிறகு நிறைய விஜய நகர ராஜாக்கள் பொன்னும் பொருளும் கொட்டி குடுத்தார்கள் .. நம் அரங்கனுக்கு .. அவை நிச்சியமாக இதை விட பல மடங்குதான் இருந்திருக்கும் !!

தொடர்ந்து பார்ப்போம்...... 

Sunday, September 20, 2015

மலைநாடு வி(ஜி)ஜயம் பாகம் -1

மலைநாட்டு வி(ஜி)ஜயம் பாகம்-1


இன்று காலை (21.09.2015)2 மணிக்கு ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்தேன். 

நேற்றைய திருவனந்தபுரம் கோவில்வாசல் செல்பி படத்தை  போட்டுவிட்டு உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகமாக கிளப்பிவிட்டுவிட்டேனோ என்று அஞ்சுகிறேன்..

நான் முன்னமே எழுதியிருந்த மாறி ஒரு கோவிலுக்கு போனால்... அது எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது (ஸ்தல புராணக்கதைகளில் எனக்கு அவ்வளவு நாட்டமில்லை) அந்த கோவில் அனுபவித்த கொடுமைகள் என்ன?? (இந்துக்கோவில்கள் எல்லாம் துலுக்க மற்றும் அந்நிய ஆதிக்கத்தின் தாக்கத்தை  அனுபவித்த விசயம் அனைவரும் அறிந்ததே)

திருப்பதிசாரம் கோவில் வாயில் இருந்த அம்மாச்சி வீடு (இதன் படத்தை முன்னமே போட்டு இருக்கிறேன் ) பற்றி கேட்ட செய்திகள் என்னை மிகவும் குழப்பி விட்டன ..

இராஜாவின் மனைவி ராணி இல்லை அவனது சகோதரிதான் ராணி .. அந்த சகோதிரி ராணியின் மகனே அடுத்த ராஜா !! 

ராஜாவின் திருமணம் .. அந்த திருமணத்தால் உண்டாகும் வாரிசுகள் .. அவர்களின் உரிமைகள் !! (அவர்களுக்குதான்  ஆளும் உரிமை இல்லையே !!) பல முறை என்னிடம் ஒருவர் விளக்கியும் புரியவில்லை !!  எனது செல்போன் மூலமாக மெல்ல படித்து .. புரிந்து கொண்டேன் ..

நமது தமிழக சரித்திரமே நமக்கு பாட புத்தகத்தில் இல்லை .. நமக்கு ராபர்ட் கிளிவே மற்றும் வாரேன் ஹேஸ்டிங் பற்றி தெரிந்த அளவிற்கு தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்களை பற்றி தெரியவில்லை !!

இப்போது நான் எழுதப்போவது .. இந்த புரியாத கேரளா சரித்திரம் பற்றி அல்ல .. பயம் வேண்டாம் ..

அனந்தபத்மநாபர் கோவில் உள்ளே இவ்வளவு செல்வம் சேர்ந்த கதை .. பற்றியே !! 

இது ஒரு விரிவான ஆராய்ச்சி கட்டுரை அல்ல .. இது  சாதாரண பாமரன் ரெண்டு நாளில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளின் சாரம் மட்டுமே .. பல தவறுகள் இருக்கலாம் ..


நாம் இன்று காணும் கேரளா என்கிற மலைநாடுகள் முன்பு தமிழகத்தின் ஒரு பகுதியாக சேர நாடு என்று வழங்கப்பட்டு தமிழ் மொழி பேசும் மாநிலமாகத்தான் இருந்தது ..

நமது அரங்கன் கோவிலில் உள்ள சேர குலவல்லித்தாயார் .. குலசேகர ஆழ்வார் (இவர் சேர குல அரசரே ) ஆகியோர் தமிழ் பேசி பாசுரம் இயற்றி .. அரங்கனுக்கு மகளை திருமணம் செய்துவித்த சங்கத்தமிழர்களே !!!

ஒரு 20-30 அடி உயர மதிர் சுவருகளை கட்டி கோட்டை என்று அழைத்துக்கொண்டு .. சுகமாக வாழ்ந்து வந்த காலத்தில் பல ஆயிரம் அடி உயர இயற்கை மலை சூழ் பகுதியாக இருந்த இந்த மலை நாட்டின் மீது பலர் படை எடுக்கவே பல ஆண்டுகள் தயக்கம் காட்டியே வந்தார்கள் !!

அந்நிய படையெடுப்பு இல்லாத காரணத்தாலும்... இந்த பகுதி மக்களின் எளிமையான வாழ்க்கை முறை காரணத்தாலும் (அவர்கள் கோவில்களில் இன்றும் ஒரு எளிமையும்... பக்தியும் மிகுந்து காணப்படுவது அனைவரும் அறிந்ததே  ) 

ஆளை மிரட்டும் அதிக செலவு செய்யும் தன்மை இல்லாத அரசர்கள் .. இவை அவர்களை நிறைய கோவில்களுக்கு (நிலக்கொடை எதுவும் அதிகம் இல்லை .. காரணம் .. அன்று மலை நாடுகளில் மக்கள் தொகை குறைவு .. இன்றும் விவசாயம் கம்மிதான் !!!)ஸ்வர்ண தானம் செய்து வந்திருக்கிறார்கள் !!!

இவர்களின் தனித்தன்மை .. இவர்களிடம் வியாபார செய்யவந்தவர்களிடம் (spice trade) பொன்னை பெற்றுக்கொண்டு அதை நிறைய கோவில்களுக்கு கொடையாக சேர்த்து வைத்துள்ளனர் !!

கொஞ்சம் விரிவாக பார்ப்போம் .. 


விஜயராகவன் கிருஷ்ணன்